தங்களால் தி.மு.க. கூட்டணிக்கு எந்த பாதிப்பும் நேராது – திருமாவளவன்

தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே நிலவிய சர்ச்சைகளுக்குப் பின், சென்னையில் வைகோவை திருமாவளவன் சந்தித்தார். அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்புக்கு பிறகு, இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, தங்கள் கட்சிகளுக்கிடையே எவ்வித நெருடலும் இல்லை என்றும், தி.மு.க. கூட்டணியில் யாராலும் நெருடலை ஏற்படுத்த முடியாது என்றும் வைகோ கூறினார்.

திருமாவளவன் பேசுகையில், தன்னாலும் வைகோவாலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எந்த பாதிப்பும் நேராது என்று குறிப்பிட்டார். இரு கட்சிகளிடையே இடைவெளி ஏற்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் முயன்றதாக திருமாவளவன் சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *