டியூனா மீன்கள் ஏற்றுமதிக்காக ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – ஜெயக்குமார்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஜப்பானின் முன்னணி ஏற்றுமதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக கடல் பகுதிகளில் டியூனா வகை மீன்கள் அதிகமாக உள்ளதாகவும், அவற்றை ஏற்றுமதி செய்ய ஜப்பானின் “கிமோரா” என்ற ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகக் கூறினார்.

வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், கிமோரா நிறுவனம் சார்பில் தமிழக மீனவர்களுக்கு டியூனா மீன்களை பிடிப்பது, பதப்படுத்துவது  உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *