அதிமுக பலாப்பழம் போன்றும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எட்டிக்காய் போன்றது என்றும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
சென்னை பல்கலைகழக வளாகத்தில் செய்தியளார்களிடம் பேசிய அவர், கட்சி சட்டவிதிகளின்படி, வேறொரு கட்சியில் இருப்பவர், அதிமுகவில் தொடர முடியாது என்பதன் அடிப்படையிலேயே, சசிகலா நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவின் ஓர் அங்கம் என தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பலாப்பழம் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எட்டிக்காய் என்றார்.