தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படைத் தளபதியாக இந்திய ராணுவ அதிகாரி நியமனம்

சூடான் நாட்டின் தெற்கு பிராந்தியத்தின் அமைதிப் படைக்கு தளபதியாக ருவாண்டாவைச் சேர்ந்த பிராங் கமன்ஸி இருந்தார். ஆனால் அவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதை அடுத்து தெற்கு சூடானுக்கான அமைதிப் படையின் புதிய தளபதியாக இந்திய ராணுவ அதிகாரியான சைலேஷ் தினகரை ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனிடா குட்டெரஸ் நியமித்துள்ளார். லெப்டினண்ட் ஜெனரலான சைலேஷ் தினகர், ராணுவப் பயிற்சி பள்ளியின் தளபதியாகவும், ராணுவ செயல்பாடுகளுக்கான கூடுதல் பொது இயக்குனராகவும் இருந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் போர் உத்திகள் தொடர்பாக எம்.பில் பட்டம் பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *