21 பேரை வேட்டையாடி ரத்த ருசி கண்ட சிறுத்தை சுட்டுக் கொலை

உத்தரகாண்ட் மாநிலம் மலைப்பகுதியில் இருந்து ஹரித்துவாரில் நடமாடிய சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் பிடிக்க முடியாததால் சுட்டுக் கொன்றனர்.

இந்த சிறுத்தை கடந்த சில வாரங்களாக அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதுவரை சிறுத்தையால் தாக்கப்பட்டு 21 பேர் உயிரிழந்தனர். ரத்த ருசி கண்ட இந்த சிறுத்தையால் மனிதர்களுக்கு ஆபத்து என்று உணர்ந்த வனத்துறையினர் அதை சுட்டுப் பிடித்தனர்.

உயிரிழந்த சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *