20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் எதிர்கொள்ளும்: கமல்ஹாசன்

தமிழகத்தில் 20சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இருக்கக் கூடும் என்றும், இருந்தால் மக்கள் நீதிமய்யம் அதற்கும் தயாராக இருக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது 64ஆவது பிறந்தநாளையொட்டிச் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இருந்தால் மக்கள் நீதி மய்யம் அதற்கும் தயாராக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *