விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் கைப்பற்றியுள்ளார். லண்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரினா வில்லியம்சை அவர் எதிர்கொண்டார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போட்டியில் பலமுறை செரினா தடுமாறினார். இதனால், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தி கெர்பர் வெற்றி பெற்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கெர்பர் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். 22 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனி வீராங்கனை ஒருவர் விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.