கோவை மாவட்டம் வால்பாறையில் குட்டியுடன் சிறுத்தை நடமாடிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
வால்பாறையில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப் படுகிறது. இந்நிலையில், கோ ஆபரேடிவ் காலனியில் ஒரு விடுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், சிறுத்தைகள் நடமாடியது பதிவாகியிருந்தன. அதில், நேற்று அதிகாலை நேரத்தில் சிறுத்தைகள் காலாற சாலையில் நடைபயின்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.