லஞ்சப்புகாரில் கைதான கோவை பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி உத்தரவு…

லஞ்ச புகாரில் கைதான பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, உதவி பேராசிரியரிடமிருந்து 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கடந்த சனிக்கிழமை லஞ்ச ஒழிப்புதுறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்க உதவியதாக பல்கலைக்கழக வேதியியல் பிரிவு பேராசிரியர் தர்மராஜனும் கைது செய்யபட்டார். இவர்கள் இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் இரு தினங்களாக சோதனை மேற்கொண்டனர். இதில், ஏராளமான ஆவணங்கள், குறிப்பேடுகள், டைரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்களின் கையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்புதுறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *