பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் யுனெஸ்கோவில் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதால், அந்த அமைப்பில் இருந்து வெளியேற அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரைப் பகுதி நகரான ஹெப்ரோன், பாலஸ்தீனத்தின் தொன்மையான வரலாற்றுச் சின்னம் என வலியுறுத்தி யுனெஸ்கோ நிறைவேற்றிய தீர்மானமே ட்ரம்ப் அரசின் இந்த முடிவுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது. 1980-களில் ரீகன் இருந்த போது யுனெஸ்கோவை விட்டு வெளியேறிய அமெரிக்கா, 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணைந்தது.
2017-10-13