மாறன் சகோதரர்களுக்கு எதிரான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழககு அக்.22க்கு தேதிக்கு ஒத்திவைப்பு

மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சாட்சிகள் விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி 7 பேருக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 4-ஆம் தேதி சாட்சிகள்  விசாரணை தொடங்கும் என சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்தது.

குற்றச்சாட்டு பதிவுக்கு எதிராக மாறன் சகோதரர்கள் உள்ளிடோர்  தாக்கல் செய மனுவின் பேரில் சாட்சிகள் விசாரணையை தொடங்கவேண்டாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 22-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *