மஹாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலி என தகவல்

மஹாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரத்னகிரி மாவட்டம் டபோலியில் அமைந்துள்ள டாக்டர் பாலசாஹேப் சவந்த் கொன்கன் வித்யாபீடம் என்ற வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஊழியர்கள் சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பிரேத சுற்றுலாத்தலமான மகாபலேஷ்வருக்கு பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்றுள்ளனர்.

மும்பையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில்  ராய்காட் மாவட்டம் அம்பெனலி காட் என்ற மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக 200 அடி பள்ளதாக்கில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த ஒருவர் பெரும் போராட்டத்திற்கு இடையே மேலே வந்து தகவல் தெரிவித்த பின்பே பேருந்து விபத்தில் சிக்கியது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உருக்குலைந்த் பேருந்தில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. புனேவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *