மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ்ஜின் இறுதி சடங்கிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தாய்லாந்து மன்னராக கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திய பூமிபால், தனது 88-வது வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி உயிரிழந்தார். மக்களும், உலகத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த ஓராண்டாக அவரது உடல் அரண்மனை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மன்னர் குடும்பத்தின் பாரம்பரிய முறைப்படி மிகுந்த ஆடம்பரமான முறையில் அவரது இறுதி சடங்கு வரும் 25-ம் தேதி நடைபெற்றது. இந்து மற்றும் புத்த மத முறைப்படி நடக்கவுள்ள இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *