மக்களின் எதிர்பார்ப்புகளை அ.தி.மு.க. – தி.மு.க. பூர்த்தி செய்யவில்லை – கமல்ஹாசன்

அதிமுக – திமுக என்ற இரண்டு தவறான கட்சிகளை தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். ஆங்கில நாளிதழின் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், கொள்கையை பார்த்து அரசியலைத் தேர்வு செய்யும் மக்கள் அதிமுக, திமுக ஆகிய இரண்டு தவறான அரசியல் கட்சிகளைத் தேர்வு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த இரு கட்சிகளும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய கமல்ஹாசன், ஊழல்கள் ஒருபுறமிருக்க அதிமுக திமுக ஆட்சிகளில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றார்.இக்கட்சிகளுடன் நேருக்கு நேர் மோத வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கமல் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் தேர்வு செய்ய மூன்றாவது அணியாக மக்கள் நீதி மய்யம் இருப்பதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *