மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களின் மரணச் செய்தி வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
கடந்த 1968-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 10 முறை மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முதல் கட்டத்தில் மக்களவைத் தலைவராக 2004 முதல் 2009 வரை பொறுப்பு வகித்தார். இந்தியாவின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்ற சாட்டர்ஜி 1996 ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருதைப் பெற்றுள்ளார்.
ஏழை, எளியவர்களுக்காகவும், தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த சிறந்த நாடாளுமன்றவாதியை இழந்து வாடும் இடதுசாரி தோழர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்
2018-08-13