பிரதமர் மோடியை ஆரத்தழுவிய ராகுல் காந்தி நாடகம் ஆடினாலும், யாரும் அவரை நம்ப மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக அரசின் நலத்திட்டங்கள் குறித்து, அதிமுக அரசுக்கு தெரிந்ததால் தான் தங்களுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறினார். மேலும் மக்களவையில் ராகுல்காந்தி தனது உரையை முடித்தவுடன், பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று அவரை கட்டித்தழுவினார். இதனை சற்றும் எதிர்பாராத பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பாக உரையாற்றியதாக ராகுலுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தனது இருக்கைக்கு சென்று ராகுல் காந்தி, கண்சிமிட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ராகுல் காந்தியின் இந்த செயல் அப்பட்டமான நாடகம் என்றும் பிரதமர் மோடியை ஆரத்தழுவி நாடகம் ஆடினாலும், யாரும் அவரை நம்ப மாட்டார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். மேலும் மக்களவையில் ஒரு உறுப்பினர்கள் கூட இல்லாத திமுக எவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தர முடியும்? இலங்கையில் தமிழகர்கள் கொல்லப்பட்ட போது திமுக எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வந்தது? என்றும் கேள்விகளை எழுப்பினார்.