போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்க்கிறேன் – மு. தமிமுன் அன்சாரி அறிக்கை

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு
மஜக கடும் கண்டனம் :

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர்
மு. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தொடர் போராட்டத்தின் நூறாவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப் பேரணி சென்ற தூத்துக்குடியிலுள்ள 18 கிராம மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மண்ணுரிமைக்காக போராடிய பொதுமக்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியது, துப்பாக்கி சூடு நடத்தியது நம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமோ என்கிற அச்சத்தை எழுப்பிகின்றது. இக்கொடுஞ் செயலை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் முடிவை எடுக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் அரசு நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் என மஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *