புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி, கந்தசாமி, ஷாஜஹான், கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குருப் சி மற்றும் குருப் பி ஊழியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயும், தினக்கூலி ஊழியர்களுக்கு ஆயிரத்து 200 ரூபாயும் தீபாவளி போனஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் போன்ஸ் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.