பீகாரில் சிறுமியை 7மாதங்களாக கூட்டாக பாலியல் வன்முறை

பீகாரில் சிறுமியை 7மாதங்களாக கூட்டாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி வந்த புகாரில், தனியார் பள்ளியின் முதல்வரும், ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரின் சப்ரா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு இந்த கொடுமை நேர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் வகுப்பில் உடன்படித்து வந்த மாணவன் ஒருவனால் தாம் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதன் பிறகு பிளாக் மெயில் செய்து வேறு சில மாணவர்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக சிறுமி புகாரில் கூறியுள்ளார்.

கடந்த 7 மாதங்களில் 15 மாணவர்கள் தம்மை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும், இதுதவிர பள்ளியின் முதல்வரும் இரு ஆசிரியர்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும் புகாரில் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *