பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகை அளிக்க பரிசீலனை – ஜெயக்குமார்

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப்பொருள்கள் தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அனைத்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்ற 30-ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, மீன்பிடி உபகரணங்கள், பூச்சிக்கொல்லிகள், இயற்கை உரங்கள் உள்ளிட்ட 72 பொருள்களின் மீதான வரியை குறைக்கவும், அவற்றில் சில பொருள்களுக்கான வரிவிலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *