வம்சம் டிவி தொடரில் நடித்த நடிகை பிரியங்கா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக் காட்சித் தொடர்களில் நடித்து வந்தவர் பிரியங்கா. இவர், வளசரவாக்கம் காமக்கோடி நகரில் கணவருடன் வசித்து வந்தார். 32 வயதான அவருக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி கணவர் வீட்டாருடன் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அறைக் கதவை உள்புறமாக தாழிட்டு நீண்ட நேரம் பிரியங்கா கதவைத் திறக்கவில்லை எனக் கூறி, அவரது கணவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, பிரியங்கா தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். நேற்றிரவு இருவருக்கும் இடையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டதா? என போலீசார் அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.