தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் – வீரலட்சுமி

நடிகர் கமலஹாசன் நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழர்களின் உயர் கலாச்சாரத்தை கெடுத்து பண்பாடு,மற்றும் குடும்ப வாழ்வியலை குட்டிச்சுவராக்கி தமிழர்களின் உயர் தனிமனித ஒழுக்கத்தை நாசமாக்கும் நிகழ்ச்சியாகும்.

இது அயல் நாட்டின் சீரழிந்த கலாச்சாரத்தை எங்கள் தமிழினத்திற்குள் புகுத்தும் முயற்ச்சி.

இது குடும்ப பெண்களுக்கு எதிரான நிகழ்ச்சி, இளம் பெண்கள் இளம் ஆண்கள் இடையே பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களை தூண்டும் நிகழ்ச்சி எனவே வரும் ஜுன் 17ம் தேதி வெளியாகும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தடைச்செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழர்முன்னேற்றப்படை கோரிக்கை விடுக்கிறது.

உள்த்துறை செயலாளர் தமிழ்நாடு அரசு அவர்களிடம் தமிழர்முன்னேற்றப்படை சார்பாக கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *