பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்காக பொதுமக்கள் பலர் கூடியிருந்தனர். அப்போது அங்கு திடீரென தீவிரவாதி ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில், 13 பேர் பலியாகியுள்ளதாகவும், சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
2017-10-06