பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்காக பொதுமக்கள் பலர் கூடியிருந்தனர். அப்போது அங்கு திடீரென தீவிரவாதி ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில், 13 பேர் பலியாகியுள்ளதாகவும், சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *