நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத் தடை – பசுமைத் தீர்ப்பாயம்

வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த அக்டோபா் 9ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கு தொடா்பாக இன்று தீர்ப்பு வழங்கியது.

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேசிய  பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிரத்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சோ்ந்த சுந்தரராஜன் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். திட்டத்தால் சுற்றுசூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும், பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்..

வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த அக்டோபா் 9ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கு தொடா்பாக இன்று தீர்ப்பு வழங்கியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *