நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *