நாகூரில் நிலக்கரிக்கு தடைவிதிக்க கோரி போராடியவர்கள் மீது தடியடி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி விடுத்துள்ள அறிக்கையில்:

நாகூருக்கு மிக அருகில் உள்ள காரைக்கால் மார்க் தனியார் துறை முகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் நாகூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் காற்றில் பரவும் நிலக்கரி தூசிகளால் சுற்றுப்புற சூழலுக்கு கேடு ஏற்பட்டு அதனால் மக்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட இன்னும் பிற நோய்களாலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதற்காக நாகூர் பகுதி மக்கள் பல்வேறு வழிகளில் முறையிட்டும்,பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும், மத்திய,மாநில அரசுகள் கண்டு கொள்ள வில்லை.இந்நிலையில் நேற்று(04.05.18)மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் அதிகமான நாகூர் பகுதி மக்கள் புதிய பேருந்து நிலையத்தில் அமைதியாக நடத்திய போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தி போராட்டத்தை சீர்குலைத்து,போராட்டகாரர்கள் 60 க்கும் மேற்பட்டோரை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

காவல்துறை கைது செய்துள்ள போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்;அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்தி போராட்டத்தை சீர்குலைக்க உத்தரவிட்ட காவல்துறை அதிகாரி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்;அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நிலக்கரி இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டு கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *