நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் பொன்வண்ணன் கடிதம் அளித்திருந்தார். நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் பொன்வண்ணன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளதாக தெரிவித்தார். நடிகர் சங்க விதிகளின் படி தேர்தலில் நிற்பது தவறில்லை என்றும் அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், பொன்வண்ணனின் ராஜினமா கடிதத்தை ஏற்க மாட்டோம் என்றும், ராஜினாமா முடிவை பரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.