தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் அபாரமாக ஆடி சதமடித்தார். பின்னர் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதமடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *