தீபாவளியை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசுகளை பொதுமக்கள் வெடித்து மகிழ்ந்தனர். இதையடுத்து சென்னையில் மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் 3 இடங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் காற்று மாசு அளவு 263 ஆக இருப்பதாக தெரிவித்துள்ளது. காற்றின் நுண் துகள்கள் அதிகம் கலந்திருப்பதால் மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும் எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே சென்னையில் மயிலாப்பூர், கிண்டி, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய இடங்களிலும் பட்டாசு வெடித்தால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
2017-10-19