தீபாவளி திருநாளான நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் கட்சித்தொண்டர்கள் சந்தித்தனர்.

சென்னை வேளச்சேரி தாய் மண் அலுவலகத்தில் வேளச்சேரி தொகுதி செயலாளர் த.இளையா, எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனை சந்தித்து, இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் வேளச்சேரி தொகுதி அமைப்பாளர் அருண்பிரேம், தொல்.திருமாவளவனை சந்தித்து இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி தீபாவளி வாழ்த்து பெற்றார்.

இதைத்தொடர்ந்து ஏராளமான கட்சி தொண்டர்களும் காவல்துறை நண்பர்களும் மற்றும் பகுதி பொதுமக்கள்
ஏராளமானோர் தொல்.திருமாவளவனை சந்தித்து தீபாவளி வாழ்த்து பெற்றனர்.

இறுதியாக தலைமை அலுவலக செயலாளர் அம்பேத்வளவன் தலைமையில் எழுச்சித்தமிழரின் தந்தை தொல்காப்பியர் படத்திற்கு மாலை அணிவித்து படையல் வைத்து வணங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக வேளச்சேரி தொகுதி செயலாளர் த.இளையா கலந்துகொண்டு இதனை சிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *