தீபாவளிக்கு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகர் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சுமார் 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார். 

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.
நவம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் 12 ஆயிரம் பேருந்துகளும், பண்டிகை முடிந்த பின்னர் மீதம் உள்ள பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணா நகர், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *