திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் காலமானார்..

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் ஏ.கே.போஸ் வசித்து வந்தார். நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே போஸின் உயிர் பிரிந்தது. ஏ.கே.போசின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

முதுகலைப் பட்டம் பெற்ற ஏ.கே.போஸ், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தவர். 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016ல் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *