திமுக தலைவர் கருணாநிதி மீண்டு வந்தால் தமிழ்நாடு மீண்டுவிடும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை அரசியல் கட்சி தலைவர்கள் பலர் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடியின் சந்திப்புக்கு பின்னர் பல்வேறு கட்சி தலைவர்களும் கருணாநிதியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு கவிஞர் வைரமுத்து திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி ஆரோக்கியதுடன் இருப்பதாகவும், அவர் மீண்டு விட்டால் தமிழ்நாடு மீண்டு விடும் என்று கூறினார்.