தமிழ்நாட்டில் அனைத்து அரசு ஊழியர்களும் பணிநேரத்தின் போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளர் ஸ்வர்ணா பிறப்பித்திருக்கும் உத்தரவில், அரசு ஊழியர்கள், அலுவலகத்தில் பணியின்போது தங்களுக்கான அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். பணியாளர் அல்லது ஊழியர் பெயர், அவர் வகிக்கும் பதவி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் என ஒன்றன் கீழ் ஒன்றாக இடம்பெற வேண்டும் என்றும், இதற்கேற்றார் போல அடையாள அட்டையில் மாற்றம் செய்து வழங்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து அனைத்து அரசு ஊழியர்களும் வேலை நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.