தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை ; முதலமைச்சருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பார் என தகவல்

தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று சென்னை வருகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கும், டிடிவி தினகரன் அணிக்கும் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று, தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ், இன்று சென்னை வருகிறார். அப்போது அவர் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *