தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் போலியோ நோயை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 43 ஆயிரத்து 051 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எத்தனை முறை சொட்டு மருந்து போட்டிருந்தாலும் பங்கேற்று போலியோ மருந்து போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 7 புள்ளி 6 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு ஆயிரத்து 640 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *