தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் தோவாலாவில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், நடுவட்டத்தில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்‍கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவு நேரங்களில் லேசான மழைக்‍கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *