தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு மத்திய வங்க கடல் முதல் வடக்கு ஆந்திரா வரை உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், வெப்பச்சலனத்தின் காரணமாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2017-09-18