தமிழகத்தில் கரூர், பெரம்பலூர், மதுரை,சேலம், நாமக்கல், தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

அரபிக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கரூர், பெரம்பலூர், மதுரை,சேலம், நாமக்கல், தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு, ஆர்.என். புதூர், லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம், சூரியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *