தென் மேற்கு வங்க கடலில் கடந்த சனிக்கிழமை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்பட்டதாகவும், இது தற்போது தமிழக கடலோரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2018-02-06