மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் நகரின் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
2017-10-18