தமிழகத்தில், கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்துவருகிறது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டுள்ள காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணபடுவதால் இரவுநேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துவருவதால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு மத்திய நீர் அணைய அளவீட்டின்படி நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாகவும், பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருவதாலும், ஒகேனக்கல் ஆற்றில் தொடர்ந்து 12-வது நாளாக பரிசல் இயக்கவில்லை. (தருமபுரி)
இதேபோல், திருவாரூரில் நேற்று மாலையில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.