தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்துவருகிறது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்குச் சுழற்சிஏற்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மிதமான மழையும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணபடுவதால் மாலை அல்லது இரவுநேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *