தமது தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், முதலமைச்சராக தன்னை நினைத்துக் கொள்ளவில்லை என்றும், ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளையே தான் தொடர்வதாகவும் கூறினார். ஆட்சியைக் கலைக்க பல பேர் திட்டம் போட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், ஆனால், தொண்டர்கள் ஆதரவு இருக்கும் வரை ஆட்சியையோ, கட்சியையோ அசைக்க முடியாது என்றார். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரப்போவதால், இரவு, பகல் பாராமல் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *