டைட்டானிக் கப்பலில் கடலில் மூழ்கி உயிரிழந்த பயணி ஒருவர் எழுதிய கடிதம் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது.

மிகப்பெரிய பயணிகள் கப்பலான டைட்டானிக் கப்பல் பிரிட்டனின் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குச் செல்லும் வழியில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையின் மீது மோதி உடைந்து கடலில் மூழ்கியது. 1912ஆம் ஆண்டில் நேர்ந்த இந்த விபத்தில் கப்பலில் இருந்த பயணிகள் மாலுமிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது உயிரிழந்தவர்களில் ஒருவரான அமெரிக்காவின் ஹோல்வர்சன் என்பவர் தனது தாய்க்கு எழுதிய கடிதத்தை அந்த விபத்தில் உயிர் தப்பியவரான ஒருவர் எடுத்து வைத்துள்ளார். அந்தக் கடிதம் பலரிடம் கைமாறிய நிலையில் பிரிட்டனின் வில்ட்சயர் நகரில் ஏலத்துக்கு வந்துள்ளது. இந்தக் கடிதத்தில் கப்பலில் பயணம் செய்த பல்வேறு பயணிகள் குறித்தும் ஹோல்வர்சன் எழுதியுள்ளார். இந்த கடிதம் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *