ஜெய்பூரில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில், அரியானா மற்றும் ஜெய்பூர் அணிகள் வெற்றி பெற்றன.

ஐந்தாவது சீசன் புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெய்பூரில் நடைபெற்ற போட்டியில் அரியானா அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், அரியானா அணி 32க்கு 30 என்ற புள்ளியில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற மற்றொரு போட்டியில், ஜெய்பூர் அணி மும்பை அணியை எதிர்கொண்டது. சிறப்பாக விளையாடிய ஜெய்பூர் அணி வீரர்கள் புள்ளிகளை உயர்த்தினர். இதனால் ஜெய்பூர் அணி 36க்கு 32 என்ற புள்ளியில் மும்பை அணியை வீழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *