மதுரையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளிநாட்டு மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், மத்திய அமைச்சர்கள், ஆளுனர் உள்பட அனைவரையும் விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரை பார்க்க விடாமல் எந்த பெரிய சக்தி தடுத்தது என கேள்வி எழுப்பிய எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் இப்படி தான் சொல்ல வேண்டும் என்று நிர்பந்தித்தது யார்? என்று வினவினார்.
2017-09-30