ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; மத்திய அரசு தலையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

ஜெனிவாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முற்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வில் பங்கேற்று உரையாற்றச் சென்ற வைகோவை, அங்கிருந்த சிங்களர்கள் சிலர் தாக்க முற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்து தாம் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வைகோவை சிங்களர்கள் தாக்க முற்பட்ட செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். எனவே, வைகோவுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மக்கள் சார்பில் மத்திய அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *