ஐதராபாத்தில் தரையிறங்கும்போது ஜசீரா ஏர்வேஸ் நிறுவன விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது.
குவைத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் ஐதராபாத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக இரண்டு எஞ்சினில் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டாலும் விமானிகளின் சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக ஐதராபாத்தில் தரையிறக்கினர்.
விமானத்தில் இருந்து 149 பயணிகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ அணைக்கப்பட்ட போதும் எஞ்சினில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.