இன்சைட் என்ற திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு மே மாதம் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை நாசா அனுப்புகிறது. இதில் பயணிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததில் அமெரிக்கர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அந்நாட்டிலிருந்து ஆறு லட்சத்து 76 ஆயிரத்து 773 பேர் செவ்வாய் கிரகம் செல்ல விரும்பி விண்ணப்பித்துள்ளனர். சீனாவிலிருந்து 2 லட்சத்து 62 ஆயிரத்து 752 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்துக்கு 38 ஆயிரத்து 899 பேர் செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல விரும்பி விண்ணப்பித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
2017-11-10